Monday, November 05, 2007

தெரிந்து கொள்வோமே!! - நாகம்

மக்களே
நாகம் அனைத்து கடவுள்களிடமும் இருக்கின்றன..யாரிடம் மற்றும் எவ்வடிவில் என்பதே கேள்வி!!
1. விநாயகரிடம் எவ்வடிவில் நாகம் உள்ளது?
2. முருகப்பெருமானிடம் ?
3. அம்பிகையிடம்?
4. சிவபெருமானிடம்?

5 ஆதிசேடன், கார்க்கோடகன், தட்சகன் ஆகிய நாகராஜாக்கள் பூஜித்த தலம் எது?

விடைகள்
1. உதரபந்தனம் என்ற அரைஞாண் கயிறாக
2. மயிற்கால் பந்தனம்
3. சிறுவிரல் மோதிரமாக
4. நாகாபரணம்
5.திருநாகேஸ்வரம்
தொடரும்

Sunday, October 07, 2007

தெரிந்து கொள்வோமே!!

மக்களே!!
மீண்டும் இத்தளத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் வந்துள்ளேன். கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!

1. கருவறையின் வேறுபெயர்கள் என்ன?
2. குருபூர்ணிமா எனப்படும் நாள் எது?
3. கேது தோஷ பரிகாரத்திற்கு உகந்த இடம் எது?
4. சௌந்தராண்யம் எனப்படும் ஊர் எது?
5. விஜயநகர மன்னர்கள் வழிபட்ட சக்தி தேவி யார்?

தொடரும்..
1கர்பகிரஹம், சந்திதானம், மூலஸ்தானம், உண்ணாழிகை
2.வியாச பூஜை நாள்
3.பிள்ளையார்பட்டி
4. நாகைப்பட்டிணம்
5. மாரியம்மன்
தொடரும்..

Friday, September 21, 2007

Makkale

My dear Makkale..

Sorry for leaving abruptly all these days!!

Okay.. I will come back on Oct 7th (after my exams) with a new post.

Thanks for coming by!!
See you soon !!
Priya

Monday, June 18, 2007

தெரிந்து கொள்வோமே!!

வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்..

1. தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் எது
2. ராமபிரான் நவகிரஹங்களுக்கு சிலை பிரதிஷ்டை செய்த இடம் எது?
3.அட்சய திருதியை அன்று செய்யவேண்டிய காரியங்கள் என்னென்ன?
4.சொரிமுத்தையனார் ஆலயம் எங்கு உள்ளது ?
5.காசியில் கங்கை எந்த திசையை நோக்கி பாய்கிறது?

விடைகள்

1. ஸ்ரீ வில்லிபுத்தூர்
2. தேவிப்ப்ட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
3. பெண் பார்த்தல், தொழில் தொடங்கல், வேலைக்கு விண்ணப்பித்தல், புதுப்பொருள், நகை வாங்ககுதல்.
4. காரையாறு (பொதிகை மலை அருகில்)
5. வடக்கு முகமாக..
தொடரும்..

Sunday, March 25, 2007

தெரிந்து கொள்வோமே !!! - வாஸ்து

வாஸ்து

1.வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
2.வீட்டின் கிழக்கு திசையில் இருக்கவேண்டியது எது?
3.வீட்டின் தெற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
4.வீட்டின் மேற்கு திசையில் இருக்கவேண்டியது எது?
5.வீட்டின் வடக்கு திசையின் இருக்கவேண்டியது எது?
விடைகள்
1. தென்கிழக்கு - சமையல் அறை
2. கிழக்கு - படிக்கும் அறை, நுழை வாயில்
3. தெற்கு - படுக்கையறை
4. மேற்கு - குழந்தைகள் படுக்கையறை (second bed room)
5. வடக்கு - பண்ம் சேமிப்பு அறை

தொடரும்..

Thursday, March 01, 2007

தெரிந்து கொள்வோமே !!! - அபிஷேகம், விபூதி மற்றும் பூஜை

மக்களே! இப்பதிவில் பூஜை,அபிஷேகம் பற்றிய கேள்விகளைப் பார்ப்போம்.
1. இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
2.இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
3.இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
4.இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
6.இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
7.இறைவனுக்கு அரளிப் பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
8.இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
9. விபூதி எத்தனை வகைப்படும்? என்னென்ன?
10. ஸ்வார்த்த, பரார்த்த பூஜை எனபது என்ன?

பதிலகள்:
1. நீடிய வாழ்வு
2. ஆயுள் விருத்தி
3. சந்தான பாக்யம்
4. ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்
5. வாழ்வில் ஒளி/நன்மை ஏற்படும்
6. மனசஞ்சலம் தீரும்/ கல்வி கேள்வி பெருகும்
7. திருமணம் நடைபெரும்
8. சுகபோகம் தரும்/கல்வி செல்வம் பெருகும்
9. விபூதி 4 வகைப்படும்.
கற்பம் அநுகற்பம் உபகற்பம் அகற்பம்
கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும். http://www.shaivam.org/tamil/sta_sivarcana_candrikai_u.htm

10. தனக்கென்று செய்யப்படும் பூஜை - ஸ்வார்த்த பூஜை

உலக நலனுக்காக செய்யப்படும் பூஜை - பரார்த்த பூஜை
தொடரும்

Monday, February 12, 2007

தெரிந்து கொள்வோமே!! - விசேஷமான ஊர்

1. வேணுபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
2. புகலி என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
3. வெங்குரு என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
4. பிரமபுரம் என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
5. காழிசீராம விண்ணகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?

விடைகள்

அனைத்தும் சீர்காழியைத் தான் குறிக்கிறது.

1. இறைவன் மூங்கில் வடிவமாக வந்து இந்திரனுக்கு அருள் புரிந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது.
2. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் புகலிடமாகச் சென்றதால் இப் பெயர் ஏற்பட்டது
3. குருத் தன்மை இழந்த வியாழன், குருத் தன்மைப் பெற பூஜித்ததால் இப் பெயர் ஏற்பட்டது
4. ப்ரம்மன் தனது படைப்பு தொழில் இடையூறின்றி நடைபெற இறைவனை வழிபட்டு வந்ததால் இப்பெயர் பெற்றது


தொடரும்..

Thursday, February 08, 2007

தெரிந்து கொள்வோமே - விசேஷமான நாள்

1.ஸ்ரீ ரங்கநாதர் - ஆண்டாள் திருமணம் என்று நடந்தது?
2.சுந்தரேஸ்வரர் - மீனாட்ஷி திருமணம் என்று நடந்தது?
3.ராமர்-சீதை திருமணம் என்று நடந்தது?
4.ஐயப்பன் அவதரித்த நாள் எது?
5.அர்ச்சுனன் பிறந்த நாள் எது?
6. மன்மதன் உயிர் பெற்ற நாள் எது?

பதில்
1-6 :
அனைத்து விசேஷங்களும் பங்குனி- உத்திரத்தில் தான் நடந்தது!!

தொடரும்..

Saturday, January 06, 2007

தெரிந்து கொள்வோமே - தலம் - 24 !!

இனிய வாசகர்களே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!!

1. நவக்கிரஹங்கள் ஒரே திசையில் அமைந்திருக்கும் தலம் எது?

2. கஜுராஹோ கொவிலுக்கு இணையாக தமிழ்நாட்டில் ஒரு கோவில் உள்ளது. அது எது?

3. தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோவிலும் மற்றும் திருமகள் அகனி காமதேனு சூரியன் நிலமகள் போன்றோர் வழிபட்ட கோவிலுமானது எது?

4. ஜுரம் நீங்க வழிபடப்படும் தலம் எது??

5. அம்பாள் நாகையில் எப்பெயருடன் காட்சி அளிக்கிறாள் ? மேலும் இக்கோவிலின் சிறப்புகள் என்னென்ன?


வெகுநாட்களுக்குப் பிறகு தொடங்குவதால், ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இம்முறை பதில்கள் உள்ள தளங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

1..http://www.shivatemples.com/sofct/sct123.html

2.http://siddhanta.shaivam.org/sp/spt_p_kadambur.htm

3.http://www.palanitemples.com/thiruavinankudi.htm

4.http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kondiccaram.htm

5.http://www.shivatemples.com/sofct/sct082.html

விடைகள்:

1. திருக்கோளிலி / திருக்குவளை. நவகிரகங்கள் அனைத்தும் தெற்கு பார்த்து உள்ளன.

2. கடம்பூர் கரக்கோவில். கோவிலின் அடிப்பாகம் ரத வடிவில் குதிரைகள் பூட்டியது போல் உள்ளது.

3. திருவாவினன்குடி முருகன்

4. திருக்கண்டீஸ்வரம்.சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது

5.நீலாயதாக்ஷி. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

தொடரும்..

Wednesday, December 06, 2006

தெரிந்து கொள்வோமே - தீபாவளி

தீபாவளி சமயத்தில் Blog பதிவு செய்ய முடியாததால் இப்பொழுது அதனைப் பற்றிய சில கேள்விகளைப் பார்ப்போம்!! சிறிது காலமாக சரிவர பதிவு செய்யாததற்கு மன்னிக்கவும்!!

1. மஹாராஷ்ட்ரா, உ.பி மாநிலங்களில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
2. வங்காளத்தில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
3. குஜராத்தில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
4.ராஜஸ்தான், ம. பி, டெல்லி மாநிலங்களில் தீபாவளி எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
5. பஞ்சாபில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
6.யக்ஷ்ராத்திரி, அகராத்திரி எனபவை என்ன?
7.முற்காலத்தில் தீபாவளி யாருக்காக கொண்டாடப்பட்டது?
விடைகள்
1. மஹாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்த நாள்
2.மஹாதுர்கையை சிவபெருமான் அட்க்கி அமைதி படுத்திய நாள்
3.ஸ்ரீ கிருஷ்ண பகவான் இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் ஏகிய நாள்
4.மஹாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்த நாள்
5.நசிகேசனுக்கு எமன் உயிர் பிச்சையும்,சாவித்திரிக்கு புத்திரவரமும் அளித்த நாள்
6.தீபாவளியைக் குறிக்கும்
7. குபேரனுக்காகக் கொண்டாடப்பட்டது.

தொடரும்..

Monday, November 13, 2006

தெரிந்து கொள்வோமே!!- எண்கள்

பதில்கள் எண்கள் தான்!!!

1. தேவாரத் திருமுறை எத்தனை?

2. சுசீந்திரம் கோவில் ஆஞ்சனேயர் எத்தனை அடி?

3.ஆதிசங்கரர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?

4.இதயத்திலிருந்து எத்தனை நாடிகள் பிரிவதாக சாஸ்திரம் கூறுகிறது?

5.அரிச்சந்திரன் சூரிய வம்சத்தில் எத்தனையாவது சந்ததி?

6. பிரம்ம முகூர்த்தம் எனபது எந்த நேரம்?

7.காஞ்சியில் உள்ள திவ்யதேசத்தில் எண்ணிக்கை?

8.வருடத்தில் எத்தனை ஏகாதசிகள்?

9.ஆண்டாள் திருப்பாவை பாடிய தேதி என்ன என்று கணிக்கப்பட்டுள்ளது?

10.சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை?

vidaigaL

1.7
2.18
3. 32
4. 108
5.24
6.3.30-5.30
7.14
8. 24
9.18-12-731
10.64

Sunday, November 05, 2006

தெரிந்து கொள்வோமே - பொருத்துக

மக்களே!! இம்முறை வித்தியாசமாக பதில்களையும் அளித்துள்ளதால், அவற்றிலிருந்து சரியான கேள்வி பதில்களைப் பொருத்துமாறு வேண்டுகிறேன்.

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - திருக்கடையூர்
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் - பதுமகோமளை
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் - திருச்செந்தூர்
4. அகத்தியரின் மனைவி - வேங்கடநாதன்
5. ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - சீர்காழி
6. சூரபத்மனின் மனைவி - லோப முத்திரை
7. தேவவிரதன் - திருவெண்காடர்
8. சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9. ராகவேந்திரரின் இயற்பெயர் - கண்டி
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - பீஷ்மர்

Bathilgal

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - சீர்காழி
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் -திருக்கடையூர் (famous for mrithunjaya homam)
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் -கண்டி
4.அகத்தியரின் மனைவி - லோப முத்திரை
5.ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - திருச்செந்தூர்
6.சூரபத்மனின் மனைவி - பதுமகோமளை
7.தேவவிரதன் or தெய்வவிரதன் - பீஷ்மர் (சிறப்பு மிக்க விரதத்தைக் கொண்டவர்)
8.சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9.ராகவேந்திரரின் இயற்பெயர் - வேங்கடநாதன்
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - திருவெண்காடர்

Thursday, October 26, 2006

தெரிந்து கொள்வோமே!!

மக்களே,
வெகுநாட்களுக்குப் பிறகு Internet வேலை செய்யத்தொடங்கியுள்ளது. எனவே தெரிந்து கொள்வோமே பகுதியைத் தொடரலாமா!!

1. திருக்கோவில்களில் வழிபடும் லிங்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.திருவாதவூர்- பெயர்க்காரணம் தருக
3. விடங்கர் என்றார் என்ன? அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுக
4. கோபுரத்திற்கு தமிழ்ப் பெயர் என்ன?
5.காஞ்சிபுரத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
6. சிவபெருமான் குருவாக, முருகன் சீடனாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
7. சிவபெருமான் சீடனாக, முருகன் குருவாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
8. இறைவனின் திருவுருவம் எத்தனை கோலங்களில் செய்யப்படுகிறது?அவை யாவை? அவற்றின் பயன் என்ன?
9. வேடுபறி எனறால் என்ன?
10.நவவியாகரண பண்டிதன் என்பது யாரைக் குறிக்கும்?

விடைகள்
1.ஐந்து.
சுயம்பு லிங்கம் - தாமாக உருவானது
காண லிங்கம் - விநாயகர்,முருகன் தெய்வங்களால் உருவானது
தைவிக லிங்கம் - ப்ரம்மா,விஷ்ணுவால் உருவானது
மானுட லிங்கம் - மனிதர்களால் உருவானது
2.வாயுதேவன் வணங்கியதாலும்,சனி பகவான் கால்வாதம் இங்கு நீங்கியதாலும் இப்பெயர்.
3.உளியால் செதுக்கப்படாத இறையே விடங்கர் எனப்படும்.
நாகவிடங்கர் - திருநள்ளாறு சிவன்
வீதிவிடங்கர் - திருவையாறு சிவன்
ஆதிவிடங்கர் - திருக்காறாயில் சிவன்
நிலவிடங்கர் - திருவாய்மூர் சிவன்
புவனிவிடங்கர் - திருமறைக்காடு சிவன்
4. மண்ணீடு
5. காஞ்சியில் மூன்று இரவு தங்கினால் மோக்ஷம் கிடைக்கும் புண்ணியம் வரும்.
6.செஞ்சேரிமலை
7.சுவாமிமலை
8.மூன்று.
நின்ற கோலம் - உற்சவங்களில் நின்ற கோலத் திருவுருவம் பயன்படுத்தப்படுகிறது.
கிடந்த கோலம் - கோயில்களில் உள்ளவை.
அமர்ந்த கோலம் - இல்ல வழிபாடு, கடவுள் மங்கலம் செய்யப் பயன்படுகிறது.
உதாரணங்களுக்கு பின்னூட்டப்பகுதியில் "om tat sat" பதிலகளைப் பார்க்கவும்.
9. பொதுவாக முருகப்பெருமான் வள்ளியை சிறையெடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும். திருமங்கை மன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடும் விழாவும் உண்டாம். விவரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
10. ஆஞ்சனேயர் - சூரிய பகவானிடம் கல்வி கற்றார்

தொடரும்..

Sunday, October 08, 2006

தெரிந்து கொள்வோமே!! - நீர்

மக்களே!! இம்முறை நீர் என்ற தலைப்பையொட்டி சில கேள்விகளைக் காண்போம்!!!

1. ஸநானம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.ஆக்நேய ஸ்நானம் என்பது என்ன?
3. மானச ஸ்நானம் எனபது என்ன?
4.மிருத்திகா ஸ்நானம் எனபது என்ன?
5.பாற்கட்லில் இரண்டாவதாக (முதலில் ஆலகாலம்) வந்தவை எவை?
6. வில்வம் எப்படித் தோன்றியது?
7.ஆமல தீர்த்தம் எனபது என்ன?
8.கங்கா ஸ்நானம் செய்வதின் சிற்ப்பு என்ன?
9.தீர்த்தம் கொடுக்கப்ப்டும் சிவன் கோவில் எது?
10. கடல்நுரையால் ஆன பிள்ளையார் எங்கு உள்ளார்?


விடைகள் :

1. 6 வகைப்படும்.
நித்தியம் - தினமும் குளிப்பது
நைமித்திகம்- தீட்டு நீங்க ஸ்நானம் செய்வது.
காமியம் - கிருத்திகை போன்ற நாட்களில் புண்ணிய நீராடுதல்.
கிரியாங்கம் - பித்ரு காரியங்களின் பொருட்டு நீராடுதல்
மலாபகர்ஷணம்- எண்ணை தேய்த்துக் குளித்தல்
கிரியா ஸ்நானம் - புண்ணிய நதி, தீர்த்தங்களில் நீராடுதல்
இவை தான் அந்த ஆறு வகையா எனபதில் எனக்கு ஐயம் உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
2. உடம்பெங்கும் விபூதியை அணிந்து கொள்வது.
3.பிரணவ தியானம்.
4.திரு மண்ணை (ஆலயங்கள் போன்ற இடங்களில் உள்ள) உடம்பெங்கும் பூசிக்கொள்வது.
5.காமதேனு; உசசைஸ்ரவஸ் என்ற வெள்ளை குதிரை
6.பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியின் கைகளில் இருந்து வந்தது
7. காவி ரியைக் குறிக்கும்
8. 10 அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்
9.இராமேஸ்வரம்.
10.திருவலஞ்சுழி
தொடரும்..

Tuesday, October 03, 2006

இவர்கள் யார்?

இவர்கள் யார் சொல்லுங்க?? பெயர்க்காரணம் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க!!

1. வாதாத்மஜன்
2.சௌமித்ரி
3.வைனதேயன்
4.ரிபுமர்தனன்
5. தாதன்
6.சுரபதி
7.லம்போதரன்
8.குஹன (ramayana guhan illa)

விடைகள்
1.வாத (வாயு)+ ஆத்மஜன் (பிறப்பு) - ஹனுமான்
2. சுமித்ராவின் (சுமத்ரா நாட்டவள்) மகன் - லட்சுமணன்
3. வினதையின் மகன் - கருடன்
4.ரிபு (வலுவிழப்பு) + மர்தனன் ( ஆட்கொள்பவன்) - சத்ருக்னன்
5 கொடுத்தவன் (கண்ணனுக்கு சியமந்தக மணியை அளித்தவர்)- ஜாம்பவான்
6. தேவர்களின் தலைவன் - இந்திரன்
7. பெரிய வயிரை உடையவன் - விநாயகர்.
8. இதயத்தில் குடிகொண்டவன் - முருகன்

பாடல்- சீதம்மா மாயம்மா - தியாகராஜர் பாடல். பாடல் இங்கே Song No 361 !!
பொருள்:
Meaning:
O Mind (ÒmanasaÓ)!
Seetha Devi is my mother (ÒammaÓ).
Sri Rama is my father (ÒtandriÓ).
Anjaneya (ÒvaatatmajaÓ), Lakshmana (ÒSaumitriÓ), Garuda (ÒvainateyaÓ), Satrugna (ÒripumardhanaÓ), Jambavaan (ÒdhaataÓ), Bharata and others are my (ÒmaakuÓ) brothers (ÒsodharuluÓ).
Paramasiva (ÒparameeshaÓ), Vashista, Paraashara, Naarada, Saunaka, Suka, Indra (ÒsurapatiÓ), Gautama, Ganesha (ÒLambodharaÓ), Subramanya (ÒguhaÓ), Sanaka and all (ÒvarellanuÓ) the true BHAAGAVATAs on earth (ÒgresaruluÓ) are my intimate relatives (ÒbandhavuluÓ).

குறிப்பு : இவை அனைத்தும் ஒரே பாட்டில் வருகிறது.. அது என்னன்னு சொல்லுங்க...அருமையான பாட்டு!!!

Friday, September 22, 2006

தெரிந்து கொள்வோமே!! -17 நவராத்திரி

வாசகர்களே!! நவராத்திரி சம்பந்தப்பட்ட கேள்விகளை இங்கு பார்ப்போம்.மேலும், நவராத்தியின் ஒவ்வொரு நாளும் அன்றுள்ள சிறப்பைக் காண்போம்!!

மக்களே!! இம்முறை புரட்டாசி மாதத்தில் விஜயதசமி (10வது நாள்) அன்று திருவோண நட்சத்திரம் வருவதால் பெருமாளுக்கு மிக விசேஷம்..விரதம் இருக்கவிரும்பினால் இருக்கலாம். மாவிளக்கு ஏற்ற விரும்பினால் அதுவும் நல்லது..

கேள்விகளுக்கு விடைகள் நாளை பதிவி செய்ய உள்ளேன். நன்றி!!


முதல் நாள் தேவியின் பெயர் : மஹேஸ்வரி பாலா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : மல்லிகை
இலை : வில்வம்
ராகம் : தோடி

இரண்டாம் நாள் தேவியின் பெயர் : கவுமாரி குமாரி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : முல்லை
இலை : துளசி
ராகம் : கல்யாணி

மூன்றாம் நாள் தேவியின் பெயர் : வராஹி கன்யா கல்யாணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : சம்பங்கி
இலை : மருது
ராகம் : காம்போதி

நான்காம் நாள் தேவியின் பெயர் : மஹாலக்ஷ்மி ரோகிணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ஜாதி
இலை : கதிர்ப்பச்சை
ராகம் : பைரவி

ஐந்தாம் நாள் தேவியின் பெயர் : வைஷ்ணவி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : பாரிஜாதம்
இலை : விபூதிப்பச்சை
ராகம் : பந்துவராளி

ஆறாம் நாள் தேவியின் பெயர் : இந்திராணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : செம்பருத்தி
இலை : சந்தன இலை
ராகம் : நீலாம்பரி

ஏழாம் நாள் தேவியின் பெயர் : மஹாசரஸ்வதி சுமங்கலி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாழம்பூ
இலை : தும்ப இலை
ராகம் : பிலஹரி

எட்டாம் நாள் தேவியின் பெயர் : நரசிம்ம தருணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ரோஜா
இலை : பன்னீர் இலை
ராகம் : புன்னாகவராளி

ஒன்பதாம் நாள் தேவியின் பெயர்: சாமுண்டி மாதா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாமரை
இலை : மருக்கொழுந்து
ராகம் : வசந்தா

1.கொல்லூரின் ஆரம்ப மற்றும் இடைக்காலப் பெயர் என்ன?
2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?
3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?
4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?
5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?
6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதம் என்ன?
7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?
8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?
9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவக்ன கீர்த்தனையைப் பாடியவர் யார்?
10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்?

விடைகள்

1. மஹாரண்யபுரம்;கோலபுரம்
2. கோலமஹரிஷி
3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைதததால்
4.மூர்த்தி, தீர்த்தம்,தலம், ஆரண்யம், விமானம், மண்டபம்,நதி ஆகிய ஏழும் அமைந்த்தால்.
5.ஆதிசங்கரர்
6.மதியம் - புடி சாந்தி; இரவு- கஷாய தீர்த்தம்.
7.பஞ்சமுக கணபதி
8. சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
மஹா நவராத்திரி- தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
வசந்த நவராத்திரி - பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
9. முத்துசுவாமி தீட்சிதர்
10.புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி

தொடரும்

Tuesday, September 19, 2006

தெரிந்து கொள்வோமே -16 அழகு!!

வாசர்களே!! இம்முறை அழகு என்பதை அடிப்படையாகக் கொண்ட சில கேள்விகள் இங்கே!!
1. திருவாரூரில் எது அழகு?
2. திருவிடைமருதூரில் எது அழகு?
3. மன்னார்குடியில் எது அழகு?
4. தஞ்சாவூரின் பழைய பெயர் என்ன?
5.முருகு என்பதன் பொருள் என்ன?
6.மன்மதனின் அம்புகளின் பெயர் என்ன?
7.பெண்டிற்கு அழகு என்ன என்று ஒளவையார் கூறியுள்ளார்? எதில்?
8. அழகின் சிரிப்பு- இதை எழுதியவர் யார்?
9. அழகு அலைகள் என்று பொருள் படும் ஆதிசங்கரரின் படைப்பு எது?
10.அழகர் என்பது யாரைக் குறிக்கும்?அழகர் கோவில் உற்சவர் பெயர் என்ன?
விடைகள்:
1.திருவாரூரில் தேர்
2. திருவிடைமருதூரில் தெரு
3. மன்னார்குடியில் மதில்
4. த்ஞ்சாவூர் - அழகாபுரி
5.அழகு
6. 5 மலர் அம்புகள் - தாமரை அம்பு, மாம்பூ அம்பு, அசோக மலர் அம்பு,முல்லை அம்பு, நீலோற்பல அம்பு
7. உண்டி சுருங்குதல். கொன்றை வேந்தன்.
8. பாரதிதாசன்
9.சௌந்தர்ய லஹரி
10. திருமால். சுந்தரராஜப் பெருமாள்.

மக்களே!! விநாயகர் பற்றிய இக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று இன்று கண்டேன். பதில் இங்கே!

விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார் எங்கு? கஜமுகாசுரன் - திருச்செங்காட்டங்குடி

தொடரும்

Thursday, September 14, 2006

தெரிந்து கொள்வோமே !!! -15

1.சுவாஹா என்பவள் யார்?
2.சூரியனின் ரதத்தை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளின் பெயர்கள் என்ன?
3.குருபகவானின் சிற்ப்பு என்ன?
4.ராகு பகவானுக்கு உகந்த நாள் எது?
5.சனிபகவானின் அதிதேவதை யார்?
6.ஆதி புரி என்று அழைக்கப்படும் நகரம் எது?
7.புதன் பகவானை வழிபட்டால் என்ன நனமை உண்டாகும்?
8.வியாழனின் வாகனம் என்ன?
9.குருபகவான் கோவில் கொண்டுள்ள ஊர் எது?
10.சூரியனின் பெருமையை உரைக்கும் நூல் எது?

விடைகள்:
1. சுவாஹா அக்னியின் மனைவி.
2.7 குதிரைகள் - காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி.
3.குருபகவான் தீமை செய்பவரை தன் பார்வையால் நிறுத்தி விடுவார்.
4. ஞாயிறு
5. யமன்
6.திருநள்ளாறு
7.கல்வி ஜோதிடம் கணிதம் மருத்துவம்- இவற்றைப் பெருக்குவார்.
8.யானை
9. ஆலங்குடி
10. ஆதித்யஹ்ருதயம்
தொடரும்..

Thursday, September 07, 2006

தெரிந்து கொள்வோமே - விநாயரைப் பற்றி - 2

1.விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார்? எங்கு?
2.ஒளவையாருக்கு மூப்பு அளித்தது யார்?அவரை ஒளவையார் எந்த ஊரில வணங்கி வந்தார்?
3.சிதம்பரத்தில் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள விநாயகரின் பெயர்கள் என்னென்ன?
4.விநாயகரை மருத, அகத்தி, இலந்தை மற்றும் துளசி இலையால் அர்ச்சித்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.சிந்தாமணி கணபதி - பெயர்க்காரணம் தருக
6.சஷ்டி கணபதி - பெயர்க்காரணம் தருக
7.மியான்மார் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
8.மங்கோலியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
9.கம்போடியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
10.சீனா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
11.ஜப்பான் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
12. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரின் பெயர் என்ன?
விடைகள்:
1. கஜமுகாசுரன்.
2.விநாயகர். ஒளவையார் அவரை தினமும் திருக்கோவலூரில் வழிபட்டு வந்தார்.
3.சிதம்பரம்- கற்பக விநாயகர்.
பாண்டிசேரி- மணக்குள விநாயகர்
4. மருத இலையால் அர்ச்சித்தால் மகப்பேரு எற்படும்
அகத்தி இலையால் அர்ச்சித்தால் துயரம் விலகும்
இலந்தை இலையால் அர்ச்சித்தால் கல்வி மேம்படும்.
துளசி இலையால் அர்ச்சித்தால் நல்வாழ்வு ஏற்படும். ஆனால் அவருக்கு துளசி இலை ஆகாது என்றும் சொல்வார்கள். ஏனென்று விளக்கம் அறிந்தால் சொல்லவும்
5. கபில முனிவருக்கு சிந்தாமணியை திரும்பப் பெற உதவியதால் (விளக்கங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும் ) இப்பெயர்.
6. கந்த சஷ்டியில் முருகனுக்கு உறுதுணையாய் இருந்ததால் இப்பெயர்.
7. மியான்மாரில் - மஹாபீனி
8.மங்கோலியா - தோத்கார்
9. கம்போடியாவில் - பிராகனேஸ்
10. டூ ஆன்ஷி டியின்
11.வினாயஷா (also, Kangi-ten or Daishô Kangi-ten (god of joy and harmony), or again Shôten-sama or Tenson-sama as said by Om Tat Sat in the comment section)
12.தேசிக விநாயகர் - பிள்ளையார்ப்பட்டியில்.


தொடரும்..

Friday, September 01, 2006

விநாயகரைப் பற்றி அறிவோமா??

மக்களே!! என்ன??!!! விநாயகர் சதுர்த்தியை நல்லா கொண்டாடினீங்களா?? சரி நம்ம விநாயகர பற்றி சில கேள்விகளைப் பார்ப்போமா!!

1. விஷ்வக்சேனர் வழிபாடு என்பது யாரைக் குறிக்கும்?
2. விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாள் எது?
3. துர்வாயுக்மம் என்பது எது?
4. விநாயகருக்கு அருகம்புல் போல் அர்ச்சிக்க உதவும் இன்னொறு இலை எது?
5. வாதாபி கணபதிம் பஜே - என்ற பாடலை இயற்றியவர் யார்?
6. விநாயகரைத் துதித்து ஆதிசங்கரர் எழுதிய பாடல் எது?
7. விநாயகர் திருப்பரங்குன்றத்தில் எவ்வாறு காட்சியளிக்கிறார்?
8. திருவாரூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
9. திருவெண்ணை நல்லூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
10.காஞ்சிபுரத்தில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?

விடைகள்
1.விநாயகர்.
2.வெள்ளிக்கிழமை (பொதுவாக). சங்கடஹர சதுர்த்தி எனறும் சொல்லலாம் (மேலும் சதுர்த்தியில் வழிபடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி அறிய பின்னூட்டப் பகுதியில் ஓம் தத் சத் மற்றும் காரியின் உரையாடலைப் பார்க்கவும்).
3.அருகம்புல்
4.வன்னி இலை
5.முத்துசுவாமி தீக்ஷிதர்
6.கணேச பஞ்ச ரத்தினம்
7.கைகளில் கரும்போடு காட்சி அளிக்கிறார். இன்னொரு கையில் தந்தத்தை பிடித்துக் கொண்டும்
தாமரை மேல் அமர்ந்தும் காட்சி அளிக்கிறார்.
8.திருவாரூரில் - வாதாபி விநாயகர் (மாற்றுரைத்த விநாயகரும் இங்கே உள்ளார். ஆனால் அவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும்.)
9.திருவெண்ணை நல்லூரில்- பொல்லாப் பிள்ளையார்
10. காஞ்சியில் - விகடச்சக்கர விநாயகர்.

தொடரும்..