Thursday, October 26, 2006

தெரிந்து கொள்வோமே!!

மக்களே,
வெகுநாட்களுக்குப் பிறகு Internet வேலை செய்யத்தொடங்கியுள்ளது. எனவே தெரிந்து கொள்வோமே பகுதியைத் தொடரலாமா!!

1. திருக்கோவில்களில் வழிபடும் லிங்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.திருவாதவூர்- பெயர்க்காரணம் தருக
3. விடங்கர் என்றார் என்ன? அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுக
4. கோபுரத்திற்கு தமிழ்ப் பெயர் என்ன?
5.காஞ்சிபுரத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
6. சிவபெருமான் குருவாக, முருகன் சீடனாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
7. சிவபெருமான் சீடனாக, முருகன் குருவாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
8. இறைவனின் திருவுருவம் எத்தனை கோலங்களில் செய்யப்படுகிறது?அவை யாவை? அவற்றின் பயன் என்ன?
9. வேடுபறி எனறால் என்ன?
10.நவவியாகரண பண்டிதன் என்பது யாரைக் குறிக்கும்?

விடைகள்
1.ஐந்து.
சுயம்பு லிங்கம் - தாமாக உருவானது
காண லிங்கம் - விநாயகர்,முருகன் தெய்வங்களால் உருவானது
தைவிக லிங்கம் - ப்ரம்மா,விஷ்ணுவால் உருவானது
மானுட லிங்கம் - மனிதர்களால் உருவானது
2.வாயுதேவன் வணங்கியதாலும்,சனி பகவான் கால்வாதம் இங்கு நீங்கியதாலும் இப்பெயர்.
3.உளியால் செதுக்கப்படாத இறையே விடங்கர் எனப்படும்.
நாகவிடங்கர் - திருநள்ளாறு சிவன்
வீதிவிடங்கர் - திருவையாறு சிவன்
ஆதிவிடங்கர் - திருக்காறாயில் சிவன்
நிலவிடங்கர் - திருவாய்மூர் சிவன்
புவனிவிடங்கர் - திருமறைக்காடு சிவன்
4. மண்ணீடு
5. காஞ்சியில் மூன்று இரவு தங்கினால் மோக்ஷம் கிடைக்கும் புண்ணியம் வரும்.
6.செஞ்சேரிமலை
7.சுவாமிமலை
8.மூன்று.
நின்ற கோலம் - உற்சவங்களில் நின்ற கோலத் திருவுருவம் பயன்படுத்தப்படுகிறது.
கிடந்த கோலம் - கோயில்களில் உள்ளவை.
அமர்ந்த கோலம் - இல்ல வழிபாடு, கடவுள் மங்கலம் செய்யப் பயன்படுகிறது.
உதாரணங்களுக்கு பின்னூட்டப்பகுதியில் "om tat sat" பதிலகளைப் பார்க்கவும்.
9. பொதுவாக முருகப்பெருமான் வள்ளியை சிறையெடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும். திருமங்கை மன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடும் விழாவும் உண்டாம். விவரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
10. ஆஞ்சனேயர் - சூரிய பகவானிடம் கல்வி கற்றார்

தொடரும்..

Sunday, October 08, 2006

தெரிந்து கொள்வோமே!! - நீர்

மக்களே!! இம்முறை நீர் என்ற தலைப்பையொட்டி சில கேள்விகளைக் காண்போம்!!!

1. ஸநானம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.ஆக்நேய ஸ்நானம் என்பது என்ன?
3. மானச ஸ்நானம் எனபது என்ன?
4.மிருத்திகா ஸ்நானம் எனபது என்ன?
5.பாற்கட்லில் இரண்டாவதாக (முதலில் ஆலகாலம்) வந்தவை எவை?
6. வில்வம் எப்படித் தோன்றியது?
7.ஆமல தீர்த்தம் எனபது என்ன?
8.கங்கா ஸ்நானம் செய்வதின் சிற்ப்பு என்ன?
9.தீர்த்தம் கொடுக்கப்ப்டும் சிவன் கோவில் எது?
10. கடல்நுரையால் ஆன பிள்ளையார் எங்கு உள்ளார்?


விடைகள் :

1. 6 வகைப்படும்.
நித்தியம் - தினமும் குளிப்பது
நைமித்திகம்- தீட்டு நீங்க ஸ்நானம் செய்வது.
காமியம் - கிருத்திகை போன்ற நாட்களில் புண்ணிய நீராடுதல்.
கிரியாங்கம் - பித்ரு காரியங்களின் பொருட்டு நீராடுதல்
மலாபகர்ஷணம்- எண்ணை தேய்த்துக் குளித்தல்
கிரியா ஸ்நானம் - புண்ணிய நதி, தீர்த்தங்களில் நீராடுதல்
இவை தான் அந்த ஆறு வகையா எனபதில் எனக்கு ஐயம் உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
2. உடம்பெங்கும் விபூதியை அணிந்து கொள்வது.
3.பிரணவ தியானம்.
4.திரு மண்ணை (ஆலயங்கள் போன்ற இடங்களில் உள்ள) உடம்பெங்கும் பூசிக்கொள்வது.
5.காமதேனு; உசசைஸ்ரவஸ் என்ற வெள்ளை குதிரை
6.பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியின் கைகளில் இருந்து வந்தது
7. காவி ரியைக் குறிக்கும்
8. 10 அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்
9.இராமேஸ்வரம்.
10.திருவலஞ்சுழி
தொடரும்..

Tuesday, October 03, 2006

இவர்கள் யார்?

இவர்கள் யார் சொல்லுங்க?? பெயர்க்காரணம் தெரிஞ்சா அதையும் சொல்லுங்க!!

1. வாதாத்மஜன்
2.சௌமித்ரி
3.வைனதேயன்
4.ரிபுமர்தனன்
5. தாதன்
6.சுரபதி
7.லம்போதரன்
8.குஹன (ramayana guhan illa)

விடைகள்
1.வாத (வாயு)+ ஆத்மஜன் (பிறப்பு) - ஹனுமான்
2. சுமித்ராவின் (சுமத்ரா நாட்டவள்) மகன் - லட்சுமணன்
3. வினதையின் மகன் - கருடன்
4.ரிபு (வலுவிழப்பு) + மர்தனன் ( ஆட்கொள்பவன்) - சத்ருக்னன்
5 கொடுத்தவன் (கண்ணனுக்கு சியமந்தக மணியை அளித்தவர்)- ஜாம்பவான்
6. தேவர்களின் தலைவன் - இந்திரன்
7. பெரிய வயிரை உடையவன் - விநாயகர்.
8. இதயத்தில் குடிகொண்டவன் - முருகன்

பாடல்- சீதம்மா மாயம்மா - தியாகராஜர் பாடல். பாடல் இங்கே Song No 361 !!
பொருள்:
Meaning:
O Mind (ÒmanasaÓ)!
Seetha Devi is my mother (ÒammaÓ).
Sri Rama is my father (ÒtandriÓ).
Anjaneya (ÒvaatatmajaÓ), Lakshmana (ÒSaumitriÓ), Garuda (ÒvainateyaÓ), Satrugna (ÒripumardhanaÓ), Jambavaan (ÒdhaataÓ), Bharata and others are my (ÒmaakuÓ) brothers (ÒsodharuluÓ).
Paramasiva (ÒparameeshaÓ), Vashista, Paraashara, Naarada, Saunaka, Suka, Indra (ÒsurapatiÓ), Gautama, Ganesha (ÒLambodharaÓ), Subramanya (ÒguhaÓ), Sanaka and all (ÒvarellanuÓ) the true BHAAGAVATAs on earth (ÒgresaruluÓ) are my intimate relatives (ÒbandhavuluÓ).

குறிப்பு : இவை அனைத்தும் ஒரே பாட்டில் வருகிறது.. அது என்னன்னு சொல்லுங்க...அருமையான பாட்டு!!!