Sunday, May 28, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 2

இன்று நிறைய படிக்க நேரம் கிடைத்ததால் 10 கேள்விகள் - விடைகள் கீழே!!

1. ஸ்ரீ ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தது யார்?
2. கொடுங்கல்லூரில் கொவில் கொண்ட இறைவி யார்?
3. காரைக்கால் அம்மை அருளிய நூல்கள் யாவை?
4. குரங்கணி எங்கு உள்ளது? அதன் சிறப்பு என்ன?
5. கோவில் கர்பகிரகத்தின் தெற்கு வடக்கு மேற்கு திசையில் இருக்க வேண்டிய தெய்வங்கள் எவை?
6. அர்த்த மண்டபத்தின தெற்கு வடக்கு திசையில் இருக்க வேண்டிய தெய்வங்கள் எவை?
7. மூன்று தலை வீரபத்திரர் - சிலை எங்கு உள்ளது?
8. மிருதங்க தக்ஷிணாமூர்த்தி - சிலை எங்கு உள்ளது?
9. சென்னை கோயம்பேட்டில் உள்ள தொன்மையாக கோவில் எது?
10.சங்கம், பதுமம் என்றால் என்ன??

பதில்கள்

1. ஸ்ரீ ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தது திருகோஷ்டியூர் நம்பிகள். மேலும் விபரங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும்.

2. கொடுங்கல்லூரில் கொவில் கொண்ட இறைவி ஸ்ரீ பகவதியம்மன். கேரளாவில் உள்ள இந்த கோவிலில் மஹாமேரு சக்கரத்தை ஆதிசங்கரர் நிறுவி, வழிபாட்டைத் தொடக்கி வைத்தார். இந்த பகவதி அம்மன் கண்ணகி என்று கூற்ப்படுகிறது. இங்கு மாசிமாதம் பரணித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

3. காரைக்கால் அம்மை அருளிய நூல்கள் : அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை

4. குரங்கணி: இவ்வூர் திருச்ச்செந்தூர் அருகே உள்ளது. இங்கிருந்து வானரப்படை சென்று ராமருக்கு உதவியதால் இப்பெயர் வந்தது. இங்கு அமைந்துள்ள தேவியின் பெயர் முத்துமாலை அம்மன். இராவணன் சீதையை அபகரித்து சென்ற போது அவள் விட்டெறிந்த முத்து மாலையே இங்கு தேவியானது.

5. சைவக் கோவில் கர்பகிரகத்தின்

தெற்கில் - தக்ஷிணாமூர்த்தி
வடக்கில் - லிங்கோத்பவர்
மேற்கில் - ப்ரம்மா


6. அர்த்த மண்டபத்தின

தெற்கில் - விநாயகர்
வடக்கில் - துர்க்கை

7. மூன்று தலை வீரபத்திரர் சிலை தாராசுரம் என்ற ஊரில் உள்ளது.

8. மிருதங்க தக்ஷிணாமூர்த்தி சிலை கழுகுமலை என்ற ஊரில் உள்ளது.

9. சென்னை கோயம்பேட்டில் உள்ள தொன்மையாக கோவில் குசலபுரீஸ்வரர் கொவிலாம்.

10. சங்கம், பதுமம் என்பது மிகப்பெரிய எண்களைக் குறிக்கும். சங்கம் என்பது நூறு கோடான கோடி. மகாசங்கம் என்பது ஆயிரம் கோடான கோடி.
பதுமம் என்பது கோடான கோடி. மகாபதுமம் என்பது பத்து கோடான கோடி.
சங்கநிதி, பதுமநிதி என்பது குபேரனின் இருபுறமும் உள்ளவை. இது குபேரன் பலப்பல கோடிகளுக்கு அதிபதி என்பதைக் குறிக்கும்.

தொடரும்..

Monday, May 22, 2006

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்

Hey,

Welcome to this aanmeegam link. Just thought it would be nice if we recollect all the spiritual stuff what we have heard and learned from our families , books and people around.

I happened to see a book of spiritual things in the form of questions and answer at Maangadu temple. This kindled my interest to have this blog wherein I plan to post aanameegam related things in tamil, may be as questions and answers in the initial days (from that book and outside as well), so that we all can learn and share more about our temples, culture , art and shastras.

If interested in visiting this blog in future, please let me know here so that I have a boost to post regularly..Also, please feel free to discuss the relevant things associated with them!!

Thanks,
Priya

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -1

மக்களே!!! கேள்விகள் இங்கே !!

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ?

2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்?

3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்?

4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன?

5. சிரவணம் என்பது என்ன??

உங்கள் பதிலை பின்னூட்டப் பகுதியில் எழுதவும். சரியான பதில்களை வார முடிவில் பதிவு செய்ய உள்ளேன். நன்றி!

பதில்கள்

1: ஆதிசங்கரர்
2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் (வரலாறு) ( சாம்பா
-வின் கதைக்கு பின்னுட்டப் பகுதிக்கு செல்க )
3. பால ஞான பூங்கோதை
4. கரும்பேஸ்வரர் ( அம்பாள்- அழகிய நாயகி)
5. இறைவனின் புகழை கேட்டு இன்புறுதலே சிரவணம் ஆகும்

இறைவனை வழிபடுவதை ஒன்பது வ்கையாக சான்றோர் பிரிப்பர்.. அவையாவன:
S.N Form Meaning Example
1. Sravanam Hearing Parikshit
2. Nama Sankeerthanam Chanting Narada
3. Smaranam Remembering Sukhabrahmam
4. Paada Sevanam Serving at the Feet Lakshmana
5. Archanam Offering Ambarisha Rukmangada
6. Daasyam Service Hanuman , Garuda
7. Sakhyam Friendship Arjuna, Sugiriva,Vibishana
8. Vandanam Obeisance Akrura, Uddhava
9. Aatma nivedanam Self Sacrifice Mahabali

விளக்கங்களுக்கு இங்கே செல்லவும் !!

விரைவில் கேள்விகள் தொடரும்..