Wednesday, January 20, 2010

தெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
கேள்விப்பகுதிக்குச் செல்வோமா!!
1 ஔவையார் எழுதிய நூல்கள்  என்னென்ன?
2 காரைக்கால் அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
3 ஆண்டாள் பாடி எழுதிய நூல்கள் என்னென்ன?
4 ஹிந்து சமய வழிபாட்டில் ஈடுபட்ட வேறு சில பெண்களின் பெயர்கள் என்னென்ன?
5  அப்பெண்களின் படைப்புகள் என்னென்ன?


விடைகள்
1 ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர்  அகவல்  - வையார் என்ற பேரில் பலர்  பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஒளவையார்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களிலும் உள்ளன.
2 அற்புதத் திருவந்தாதி, திருவிரைட்டை மணிமாலை
3 திருப்பாவை, நாச்சியார் திருமொழி
4 காக்கைபாடினியார், பசலையார், பொன்முடியார்,பேயனார், இளவெயினி மற்றும்  பலர்.
5 பொன்முடியார்: சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.
இளவெயினி: பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும் புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.
தொடரும்