Monday, November 13, 2006

தெரிந்து கொள்வோமே!!- எண்கள்

பதில்கள் எண்கள் தான்!!!

1. தேவாரத் திருமுறை எத்தனை?

2. சுசீந்திரம் கோவில் ஆஞ்சனேயர் எத்தனை அடி?

3.ஆதிசங்கரர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?

4.இதயத்திலிருந்து எத்தனை நாடிகள் பிரிவதாக சாஸ்திரம் கூறுகிறது?

5.அரிச்சந்திரன் சூரிய வம்சத்தில் எத்தனையாவது சந்ததி?

6. பிரம்ம முகூர்த்தம் எனபது எந்த நேரம்?

7.காஞ்சியில் உள்ள திவ்யதேசத்தில் எண்ணிக்கை?

8.வருடத்தில் எத்தனை ஏகாதசிகள்?

9.ஆண்டாள் திருப்பாவை பாடிய தேதி என்ன என்று கணிக்கப்பட்டுள்ளது?

10.சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை?

vidaigaL

1.7
2.18
3. 32
4. 108
5.24
6.3.30-5.30
7.14
8. 24
9.18-12-731
10.64

Sunday, November 05, 2006

தெரிந்து கொள்வோமே - பொருத்துக

மக்களே!! இம்முறை வித்தியாசமாக பதில்களையும் அளித்துள்ளதால், அவற்றிலிருந்து சரியான கேள்வி பதில்களைப் பொருத்துமாறு வேண்டுகிறேன்.

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - திருக்கடையூர்
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் - பதுமகோமளை
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் - திருச்செந்தூர்
4. அகத்தியரின் மனைவி - வேங்கடநாதன்
5. ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - சீர்காழி
6. சூரபத்மனின் மனைவி - லோப முத்திரை
7. தேவவிரதன் - திருவெண்காடர்
8. சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9. ராகவேந்திரரின் இயற்பெயர் - கண்டி
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - பீஷ்மர்

Bathilgal

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - சீர்காழி
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் -திருக்கடையூர் (famous for mrithunjaya homam)
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் -கண்டி
4.அகத்தியரின் மனைவி - லோப முத்திரை
5.ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - திருச்செந்தூர்
6.சூரபத்மனின் மனைவி - பதுமகோமளை
7.தேவவிரதன் or தெய்வவிரதன் - பீஷ்மர் (சிறப்பு மிக்க விரதத்தைக் கொண்டவர்)
8.சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9.ராகவேந்திரரின் இயற்பெயர் - வேங்கடநாதன்
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - திருவெண்காடர்