Monday, August 17, 2009

தெரிந்து கொள்வோமே!! - கோவில்

1. ராஜாதிராஜ விண்ணகரம் என்பது எக்கோவிலைக் குறிக்கும்?
2. செண்பகாரண்யம் எக்கோவிலைச் சுற்றி உள்ளது?
3. தட்சிண துவாரகை என்பது எந்தக் கோவிலைக் குறிக்கும்? (மூன்றும் ஒரே கோவில் தான்)
3. இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் என்ன?
4. இந்தக் கோவிலைக் கட்டியது யார்? புதுப்பித்தது யார்?

பதில்கள்
1. 2. 3. மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில்
4. பரவாசுதேவர் (ஜகதோதாரணா எனத்தொடங்கும் பாடலில் கூட வரும் " பரம புருஷனா, பரவாசுதேவனா)
5. கட்டியது இராஜ ராஜ சோழன் (1018-1054 AD). புதுபித்தது குலொத்துங்க சோழன் (1074 - 1125 AD) மற்றும் விஜயராகவ நாயக் (1634-1675 A.D.)

நந்திபுர விண்ணகரம் என்ற தலம் தக்ஷிண ஜகன்நாதம் என்று அழைக்கப்படும். மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோவில் தக்ஷிண த்வாரகை என்று அழைக்கப்படும்.

Source:http://archives.chennaionline.com/toursntravel/placesofworship/mannargudi.asp
http://kanavoo.com/temples/ChozhaTirupathigal.php
தொடரும்..

Tuesday, August 11, 2009

தெரிந்து கொள்வோமே!! - ஒரே இடம்

1. பராசக்தி மயில் உரு எடுத்து ஈசனை வணங்கிய இடம் எது?
2. கந்தன் சக்திவேல் பெற்ற தலம் எது?
3.திருஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்துத் தந்த தலம் எது?
இன்னும் சந்தேகமா...
4. சென்னையில் கபாலீஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?

சரிங்க இதுக்கு பதில் தெரிந்தால் போதும்..அதுவே தான்
5. மந்தைவெளிக்கும் திருவல்லிக்கேணிக்கும் இடையில் உள்ள ஊர் எது?

விடை:

திருமயிலை

தொடரும்

Tuesday, August 04, 2009

தெரிந்து கொள்வோமே!! - சிதம்பர சபை

1. சிதம்பரம் - இதற்கு என்ன பொருள் கொள்ளலாம் ?!
2. சித் சபையில் இருப்பது யார்?
3. கனக சபையில் நடப்பது என்ன?
4. தேவ சபை என்பது என்ன?
5. நிருத சபை என்பது என்ன?
6. ராஜ சபை என்பது என்ன?

விடைகள்
1. சித் + அம்பரம் - சித் - அறிவு அம்பரம் - வெட்ட வெளி
ஞான ஆகாசம் என்பது பொருள்
2.நடராஜர் இருக்கும் இடம் சித் சபை
3.ஆராதனை மற்றும் அபிஷேகங்கள் கனக சபை
4.தீட்சதர்கள் கூடும் சபை தேவ சபை
5.நடன உருவங்கள் கொண்ட சபை நிருத சபை
6.ஆயிரங்கால் மண்டபம் கொண்ட சபை ராஜ சபை

தொடரும்..